Friday, November 21, 2008

கலவியில் சோகம் அப்பும் நேரம்

கலவியில் சோகம் அப்பும் நேரம்

நான் சிறு துரும்பென உணர்கின்றேன்

உங்கள் ஒவ்வொருவரின் இழப்புகளில்
வேகின்றது
ஆகுதி ஆன எம்
பரம்பரையின்
உயிர்

என் வயது தான் உங்களுக்கும்
சில வருடம் குறையலாம்
பெண் சுகம் என்னவென்று தெரியுமா?

அல்குளின் இன்பம் தெரியுமா?
உங்களுக்கு நான் சொல்வேன் என்னவென்று?

சொல்லுங்கள் எனக்கு தியாகியாகிப்
போவதன் சுகம்
என்னவென்று
இனம் காக்க மண்
மேல் வீழ்வதன் சுகம்
என்னவென்று

பல இலட்சம் அடிமைகளின்
விலங்கு உடைக்கும் சுகம்
எனக்கு தெரியாது
பல் கோடி சதிகளின்
கண்ணி உடைக்க தெரியாது

ஆயினும் அல்குளின் சுகம்
என்னவென்று நான் சொல்வேன்

சொல்லுங்கள்
ஏன் என்னை போல
நீங்கள் இல்லை
ஏன் பெண் சுகம்
நாடவில்லை

காட்டாறுவென அழித்து
எதிரியின் படை
வரும் போது
உங்களை ஆகுதி ஆக்கினீர்கள்
ஏன் என்னை போல
தப்பி ஓடவில்லை

அது உங்களின் குற்றம் அன்றோ
என்னை போல ஓடி வந்து
கவி வடித்திட கூடாதோ

இன்னும் எத்தனை பேரை
இழக்க போரீர்கள்

புரிந்து கொள்ளுங்கள்
உங்களின் ஒவ்வொரு சாவும்
எம்மை கழு ஏற்றுகின்றது என
கேலி பண்ணுகின்றதென

எம்மால்
தோழிகளை முத்தமிட முடியவில்லை
அல்குள் பற்றி செந்நாவால்
துழாவிட முடியவில்லை

ஒவ்வொரு முறையும்
முத்தமிடும் போது
உங்கள் முகம் வந்து போகின்றது
வடிகின்ற விந்துவில்
உங்களின் முகம்
தெரிகின்றது

சொல்லுங்கள்
ஏன் என்னை போல
நீங்கள் இல்லை

பெண் சுகத்தை விட
காமத்தினை விட
சுதந்திரம் பெரிதென்று
ஏன் சொல்லுங்கள்

அதை
என் மகனுக்காயினும்
சொல்லி சாகின்றேன்
அடிமையாய் சாதல்
துயரம் என்று காட்டி
சொல்கின்றேன்

அவனாவதுஒரு நிமிடம்
அடிமையாயின்றி
வாழட்டும்
உங்களை போல

-------------------------
மாவீரர் விபரம் (2008) அறிந்து எழுதப்பட்டது ((21-Nov-2008: 01:00 AM))





Monday, November 17, 2008

இயலாமையின் மடிப்புகளில்


இயலாமையின் மடிப்புகளில்
----------------------
ஒரு புழுவினும் கீழாய்
என்னை நிறுத்தி
காலம் நகர்கின்றது

எனது நிலங்களை
பேய்கள் அபகரிக்கும்
செய்திகளிலெல்லாம்
வந்தமருகின்றது
என் இயலாமையின்
தருணங்கள்

முகம் எங்கும் அப்பி கிடக்கிறது
போராட சென்ற
தோழர்களின் சாவு
அங்கு
அவர்கள் சாகும் பொழுதுதுகளிலும்
குளிருகின்ற இரவில்
மனைவியுடன் கலவி
கொண்டு களித்து இருந்தேன்
நானிங்கு

வீட்டின் முன்
இலைகளற்றும் மண்ணின்
பிடிப்புடன் நிமிர்ந்து
நிற்கின்றது ஒருமரம்
மண்ணற்ற என்னை
பார்பதும் இல்லை

தன் கிளையில் வந்தமரும்
குருவியிடம் சொல்லி வைத்திருந்தது
என்னிடம் பேச வேண்டாமென
துணிவற்றவனுடன் கதையெதுக்கு
என்று கேட்டது அது

வீட்டிற்குள் சென்று
உடலினை குறுக்கி
அமருகின்றேன்
இயலாமையின் மடிப்புகளில்
இருந்து பொங்கி வரும்
அழுகையை எப்படிநிறுத்துவது

-நிழலி-- (2008 - 11 - 17)

Thursday, November 6, 2008

தீபாவளியும் 'ஹலவின்' னும் என் மகனும்

நன்றாக இருட்டிய பின் என் மகனும் அவனது நண்பர் குழாமும், சின்னன் சிறு குழந்தை கூட்டமாக ஒன்றிணைந்து அயலில் உள்ள வீடுகளுக்கு போய் இன்னிப்பு பண்டங்கள் வாங்க சென்றனர். ஒவ்வொருவரும் பேய்கள் போன்று உடையணிந்தும் சிலர் மண்டையோடுகள் போன்று உடையணிந்தும் இருந்தனர். அன்று 'ஹலவீன்' நாள். கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடப்படும் நாள். நானும் எனது அப்பாவும், அவரின் தாத்தாவும் ஒரு போதும் கொண்டாடதஒரு நாள். எம் தமிழ் கலாசாரத்திலும் ஒரு போதும் வராத -நாள். மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தேன். துணைக்கு என் மனைவியும் சேர்ந்து போனார். மகனுக்கு உடை வாங்குவதற்காக பல கடைகளில் ஏறி இறங்கியது அவர் தான்.
சில நாட்கள் முன்பாக தான் தீபாவளி வந்து போனது. நாரகாசுரன் ஒரு தமிழன் என்றதனால் அவனை , ஒரு தமிழனை கொன்ற நாளை கொண்டாட்டமாக கொண்டாட மாட்டேன் என்று சொல்லி மகனுக்கும் எந்த ஒரு பண்டிகை கால உடையும் வாங்காது விட்டு இருந்தேன். அத்துடன் என் ஊரில் உள்ள எல்லோரும் சாவையும் பயங்கரங்களையும் எதிர் நோக்கி கொண்டு இருக்கும் போது நாம் மட்டும் எப்படி கொண்டாடுவது என்றும் ஒன்றுமே சொய்யவில்லை. கடந்த வருடமும் இப்படி தான் கடந்தது போனது. எனது அப்பாவும், தாத்தாவும், அவரின் முன்னோர்களும் கொண்டாடிய நாள் இந்த தீபாவளி. ஆனால் நான் கொண்டாடவில்லை

எமக்கு சம்பந்தமே இல்லாத ஹலவீனுக்கு மகனை தயார் பண்ணி வெளியே கொண்டாட அனுப்பிய பின் என் முகத்தை நிலைக் கண்ணாடியில் பார்க்கும் போது என்னால் என் முகத்தை நேர்மையாக பார்க்க முடியவில்லை.