Monday, October 20, 2008

இருப்பும், மீண்டும் எழுதுவதும்:முதல் பதிவு

இருப்பை தக்க வைப்பது என்பது இருத்தலை விட கடினமாக மாறி வரும் ஒரு சூழலில் என்னை எப்படியாவது நிலைப்படுத்தும் உறுதியில் இந்த பக்கத்தை ஆரம்பிக்கிறேன். நாளை மீண்டும் எழுதுவேனா அல்லது இந்த ஒரு குறிப்புடனேயே நிறுத்தி விடுவேனோ தெரியாது.

எதுவுமே நிச்சயிற்க இயலாத நிலையில்தான் எல்லாவற்றையும் எழுத விளைகின்றது மனம்.


என் வாழ்நாள் முழுதும் சிங்கள பேரினவாத அரசுகளாலும், இந்திய வல்லாதிக்க அரசாலும் எம் மீது திணிக்கப்பட்ட போர் ஒரு நிழலாகவே தொடருகின்றது. என் சிறுபிள்ளை காலம் முதல் இந்த நிமிடம் வரை அதன் போக்கில் அள்ளுபட்டும், மூச்சு திணறியும், சுயம் அழிந்தும், அதனுடன் சமரசம் கொள்ள முடியாமல் முட்டி மோதியும் வாழ்வு நகருகின்றது. எண்ணற்ற மரணங்களும், கொலையுண்டு போன மனிதர்களின் நினைவுகளும் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் ஒரு கரிய புகையை போல சூழ்ந்து கொண்டு நிற்கின்றன.

விடுதலை போராட்டமும், அதன் வீச்சும், அது தந்த சுதந்திரம் பற்றிய உயரிய எண்ணங்களும், அப் போராட்டம் இழைத்த, இழைத்துகொண்டு இருக்கின்ற தவறுகளும், அதன் மீதானதும், எதிரானதுமான என்னுடைய விமர்சனங்களும் எனக்குள் என் இருப்புக்கான நியாயங்களை கூறுகின்றன. விடுதலை போரின் ஆரம்பம் முதல் இந்த கணம் வரை நீக்கமற நிற்கும் துரோகங்களும், காட்டி கொடுப்புகளும், மாற்று கருத்து எதனையும் தாங்காது சகிப்புத்தன்மை அற்று வேரறுக்கும் நிகழ்வுகளும், எனக்குள் சினத்தையும் , மீண்டும், மீண்டும் எழுதவும் தூண்டுகின்றன

******************************************************
சரிநிகரில் முன்பு கொஞ்ச காலம் தொடர்ந்து எழுதிய பின் நீண்ட இடைவெளியின் பின் யாழ் இணையத்தின் மிக சிலவற்றை எழுதினேன். சரிநிகரில் எழுதியதற்கும் இப்போது எழுதுவதற்கும் பெரும் வேறு பாடு என் கருத்திலும், அரசியலிலும், பயன்படுத்தும் மொழியிலும் இருப்பதாகவே உணருகின்றேன். இந்த 8 வருட இடைவெளியில் எனக்குள்ளும், எனக்கு வெளியேயும் நிகழ்ந்த எல்லா மாற்றங்களும் இந்த வேறுபாட்டை நிகழ்த்தின....

வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாகவா அசைகின்றது...?

6 comments:

Anonymous said...

Hi Raj,

You have wonderful kavithaigal, very interesting to find one at Blogger. Actually i followed here from TMS and wondering if you can give me a invite to join there, pls. If its possible, send me the invite to kanavu at hotmail dot com

Romba nandri thalaiva.
Sri

Anonymous said...

ஓய்வும் ஒருவகையில் சிறந்தவொரு பாகம் தான். மீளவும் உயிர்ப்போது வாருங்கள். காலத்துக்கேற்ப கருத்திலும் மாற்றங்கள் இயற்கையானது.

- சாந்தி -

நிலாமதி said...

vanakam ..........you have created awonderful site .keep up your good work .

esan said...

really I enjoyed,if possible do more and make a book.why i am saying most part of your kavithai best valuvation,still some of them I am thinking.
keep up
ESAN

Anonymous said...

மன அழகு மிளிரும் அழகிய கவிதைகள்.சக்தி.ப.

சின்னக்குட்டி said...
This comment has been removed by the author.