Tuesday, October 21, 2008

முதல் பதிவிற்கான இன்னொரு பதிவு

மீண்டும் மீண்டும் நேற்று எழுதிய முதல் பதிவை வாசித்து பார்க்கிறேன்.

நாளந்த நிகழ்வுகளை, நான் பார்கின்ற, கேட்கின்ற , ரசிக்கின்ற விடயங்களை எழுதுவதற்கும். வாசிக்கிற புத்தகங்களை பற்றி எழுத போவதற்கும், கிறுக்குத்தனமான கவிதைகளுக்கும் என் முதல் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றவில்லை. அதனை ஏன் எழுதினேன் என்றும் புரியவில்லை. நீக்கி விடுவமோ என்று கூடயோசிக்கிறேன்.

என முதல் பதிவுக்கும் இனி எழுத போவதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அது திட்டமிட்ட ஒரு நிகழ்வாக இருக்கப்போவதும் இல்லை

எதனையும் திட்டமிடக் கூடியதாகவா வாழ்கை இருக்கின்றது ??

--நிழலி-

No comments: