Tuesday, December 30, 2008

நான் வாசித்த, வாசிக்கும் புத்தகங்களும் நாவல்களும்: 3

புத்தகத்தின் பெயர்: குழந்தை போராளி
சுய சரிதம், எழுதியவர் : சைனா
தமிழாக்கம்: தேவா
வெளியீடு:கருப்பு பிரதிகள்

அண்மைக் காலங்களில் என்னை மிகவும் பாதித்த ஒரு வாசிப்பு என்றால் அது இந்த சுயசரிதம் தான். ஒன்பது வயதிலேயே குழந்தை போராளியாக்கப்பட்ட பெண்ணான 'சைனா கெய்ரெற்சியின்' பறிக்கப் பட்ட குழந்தை பருவத்தின் துயரம் எனக்குள் இட்டுச் செல்லும் வலிகள் ஏராளம். 'சைனா' வின் சரிதத்தையும் அவ்வாறு குழந்தை போராளியாக மாறிய அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகளையும், போராளியாக்கப் பட்டபின் ஏற்பட்ட கடும் பாலியல் துன்புறுத்தல்களையும், ஊட்டப் பட்ட போர் வெறியையும் புரிந்து கொள்ளும் போதுதான் ஏன் எல்லா மனித உரிமைவாதிகளும் அமைப்புகளும் குழந்தைகள், சிறுவர்கள் போராளியாக்கப் படுவதை கடுமையாக எதிர்கின்றன என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது

எமது போராட்டத்தினை பயங்கரவாதமாக சித்திகரிக்க பயன்படும் ஆதாரங்களில் ஒன்று சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பதாகும். அப்படி சேர்க்கப் பட்ட சிறுவர்களுக்கு நடக்கும் பயங்கரங்கள் பற்றி உலகம் ஏற்கனவே அவ்வாறு சேர்க்கப் பட்ட சிறுவர்களின் துயர் மிகுந்த கதைகளை கேட்டு அறிந்து வைத்திருப்பதாலாகும். ஆனால் எமது சூழலும், இயக்க நடை முறைகளும், போராட தூண்டும் அரச பயங்கரவாதமும் முற்றிலும் வேறு வேறானவை என்பதை இந் நூல் வாசித்து முடிக்கும் போது என்னால் உணர முடிகின்றது. உலகம் ஒரே வகையான வர்ணத்தினை எல்லா இடமும் பூச முற்படுவதன் பின்னணி, சிறுவர்களை போராளியாக்கும் அரசியலையும், அரசுகளையும் என்றுமே அவை ஆதரித்து வந்தமையாலாகும்.

'சைனா கெய்ரெற்சி' (இனி இவரை 'சைனா' என்றே அழைக்கின்றேன்) உகண்டாவில் 1976 இல் 'துற்சி' இனக் குழுமத்தில் பிறக்கின்றார். அம்மாவை அப்பா சைனா பிறந்த பின் துரத்தி அடிக்கின்றார். தாயன்பு கிடைக்காது வளரும் சைனா கொடுமையும், சித்திரவதைகளும் செய்யக் கூடிய பாட்டியினால் ஆரம்ப காலங்களில் வளர்க்கப்படுகிறார். தந்தையாலும் பாட்டியாலும் மோசமான சித்திரவதைகளுடன் வளர்க்கப் படும் காலங்களில் பல தடவை கைகளும் கால்களும் அடி உதைகளின் மூலம் முறிக்கப்படுகின்றன. ஆப்பிரிக்க கண்டம் முழுதும் பரவிக் கிடக்கும் பெண் அடிமைத்தன முறைகளில் இவை மிக சாதாரண நிகழ்வாக போகின்றன. தந்தை இன்னொரு பெண்ணை மணம் முடிக்கின்றார். இப்பொது பாட்டியிடம் இருந்து தந்தையின் புதிய மனைவிற்கு 'சைனா' வை வளர்க்கப் படும் பொறுப்பு மாறுகின்றது, ஆனால் அதே சித்திரவதைகளும் அடி உதைகளும் தொடர்கின்றன். சைனா ஒன்பதாவது வயதில் தன் உண்மையான தாயை தேடி தனியே பயணம் போகின்றார். போகும் போது வழி தவறுகின்றது. ஈற்றில் போராளிகளின் பயிற்சி முகாமை தவறுதலாக சென்றடைகின்றார்

அது உகண்டாவில் 'இடி அமீன்' காலத்தின் அடுத்த கட்டம். மில்ரன் ஒபாடேக்கு (சனாதிபதி) எதிராக `NRA (National Resistance Army) என்ற இயக்கம் துற்சிகளின் ஆதரவை பெற்று கிளர்ச்சி செய்கின்றது. அரசு அமைக்கும் அதிகாரம் தமக்கு வேண்டும் என்று இவ் அமைப்பு போரிட்டது. அதில் தான் `சைனா`உள் வாங்கப் படுகின்றார். குறுகிய ஆயுதப் பயிற்சியின் பின்னர் நேரடியாக கள முனைக்கு அனுப்பபடுகின்றார். அப் படையின் (ண்றா) தளபதிகள் தமக்கு முன்பாக குழந்தை படையணிகளையே அனுப்புகின்றனர். முற்றிலும் குழந்தைகளாலான படைகள் தான் கடும் பலத்துடன் இருக்கும் உகண்டாவின் படையணிகளுடன் போரிடுகின்றனர். நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் குழந்தைகள் கொல்லப் படுகின்றனர். சண்டையின் பின் தளபதிகளால் போர் வெறியூட்டப்படுகின்றனர். கைது செய்யப் பட்ட எதிரிகளை அடித்தே கொல்லும் பணிக்கு குழந்தைகளையே பயன்படுத்துகின்றனர். தளபதிகள் படையணியில் இருக்கும் பெண் குழந்தைகளுடன் சல்லாபிக்கின்றன்றனர். தமக்கு விரும்பிய குழந்தை பெண் போராளிகளை பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகின்றன����். பாலியல் வல்லுறவு படுத்துகின்றனர். சைனாவும் பலதடவை பலரால் வல்லுறவாக்கப்படுகின்றார்..ஆம் ஒன்பது வயது குழந்தை மீது பல தடவை பலரால் அவளை இணத்து கொண்ட்ட (NRA) அமைப்பின் தளபதிகளால், கப்டன்களால் ஏனைய பெண் சிறு போராளிகள் போன்று பாலியல் வல்லுறவுக்குள்ளாகின்றார்

NRA தலைநகர் மீது படையெடுத்து வெல்கின்றது. சைனா NRAஅமைப்பில் தொடர்கின்றார். `கசினி` என்னும் தளபதியின் கீழ் பணியிற்கு அமர்த்தப் படுகின்றார். அவர் `சைனாவை`பல நூற்றுக்கணக்கான தடவை வல்லுறவுக்குள்ளாக்கின்றார். சைனா நாட்டை விட்டு தப்ப முயல்கின்றார். அப்படி தப்பி தென்னாபிரிக்காவுக்கு ஓடுகின்றார்.இந்த வேளையில் அவருக்கு ஒரு மகனும் இருக்கின்றார் (`சைனா`வின் வயது 12 அல்லது 13). அவ் மகனை உகண்டாவில் விட்டு விட்டு ஓடுகின்றார். தென்னாபிரிக்காவில் உகண்டாவின் புலனாய்வு பிரிவினால் கடத்தப் படுகின்றார். முதுகில் பெரிய `டிரில்லர்`ரால் துளையிடப் படுகின்றார். பெரும் சித்திரவதைகளை அனுபவித்து இறுதியில் அங்கிருந்தும் தப்பி ஐக்கிய நாடுகளின் அகதிகள் தாபனத்தில் தஞ்சம் அடைகின்றார். ஈற்றில் அவர்களின் உதவியுடன் சுவிசலார்ந்துக்கு போய் சேருகின்றார். கடும் மன அழுத்ததினால் பீடிக்க பட்ட நிலையில் வாயிலிருந்து வார்த்தைகள் கூட உச்சரிக்க முடியாத நிலையில் சுவிஸ் போய் சேருகின்றார். அங்கு கடும் சிகிச்சை அளிக்கப் படுகின்றது. அவரின் பிரதான மருத்துவர் `உனது எண்ணங்களை எழுது..அப்படி எழுதினால் உன் மன அழுத்தம் குறையும் என்கிறார். `சைனா`தன் சுய சரிதையினை எழுத ஆரம்பிக்கின்றார்

1 comment:

Anonymous said...

nizali your site is pretty good. I have a chance to read your site.by the way could you tell me the ISBN# FOR THIS BOOK.I am intrested in this book.
Thanks.
Nuna.